நிகழ்வு-செய்தி

150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதியின் காசோலைகளை வழங்கும் நிகழ்வு குறித்த சிரேஷ்ட கடற்படை வீரர்கள் பணியாற்றும் நிருவனங்கள் மற்றும் கப்பல்கள் மையமாக கொண்டு இடம்பெற்றன. மேலும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விடுப்பில் இருக்கும் சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இந்த காசோலைகள் ஒப்படைக்கப்பட்டன. 2020 மே 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

14 May 2020

குணமடைந்த கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது

கடற்படையின் சிறப்பு படகுப் படை பிரிவின் கட்டளை அதிகாரியாக தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த லெப்டினன்ட் கமாண்டர் செட்ரிக் மார்ட்டின்ஸ்டீனை நினைவுகூருவதற்காக அவரது சகோதரர் தலைமையில் கற்பிட்டி பகுதியில் உள்ள ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி 2020 மே 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளுக்காக கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

14 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 59 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 59 கடற்படை வீரர்கள் 2020 மே 13 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

14 May 2020