வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 162 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்த, 35 குடும்பங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் 162 குடும்ப உறுப்பினர்கள் 2020 மே 14 அன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்.

அதன்படி, தலாதுஒய, பெல்வுட் இளைஞர் சேவைகள் அழகியல் மையத்தில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 நபர்கள், ரன்மினிதென்ன கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 02 குடும்பங்களைச் சேர்ந்த 09 நபர்கள், ஹபராதூவ பொலிஸ் கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 18 நபர்கள், மிஹிந்தலை கடற்படை விடுமுறை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த 52 நபர்கள், வெலிகம் பே கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 29 நபர்கள் மற்றும் அனுராதபுரத்தில் நிறுவப்பட்ட மற்றொரு கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் தனுமைபடுத்தப்பட்ட கடற்படை வீரர்களின் குடும்பங்களுக்கு சேர்ந்த மேலும் 04 நபர்கள் உட்பட கடற்படை வீரர்களின் 35 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 162 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு கடற்படையால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் படி, இப்போதைக்கு கடற்படை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோர் தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்து கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறிவிட்டனர், மேலும் அவர்கள் தங்களுடைய வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள்