செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடலோர காவல்படையின் ஒருங்கிணைப்புடன் கடற்படை ஒலுவில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இரண்டு நபர்கள் (02) கைது செய்ய்ப்பட்டனர்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை கைது செய்ய இலங்கை கடற்படை பல ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் நண்டுகளை பிடித்துக்கொண்டிருந்த இந்த 02 நபர்கள், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். இங்கு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 20 சிங்கிறால், ஒரு மீன்பிடி படகு மற்றும் சில மீன்பிடி சாதனங்களையும் கடற்படை கைப்பற்றியது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 33 மற்றும் 51 வயதுடைய பாலமுனை மற்றும் ஒலுவில் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சிங்கிறால் மற்றும் மீன்பிடி சாதனங்கள் ஒலுவில் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.