ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட நான்கு சந்தேகநபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து இலுப்புகடவாய் மற்றும் முலங்காவில் பகுதிகளில் 2020 மே 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 மே 15 ஆம் திகதி அந்தோனிபுரம் கடல்கரையில் சோதனைச் சாவடியில் பணியாற்றுகின்ற வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் இலுப்புகடவாய் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலில் இருந்து கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனை செய்தனர் அப்போது அங்கு இருந்த மூன்று நபர்களிடமிருந்து 02 கிராம் ஹெரொயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன் 03 சந்தேக நபர்களும் டிங்கி படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் ஆகியவற்றுடன் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படை, இன்று (2020 மே 16,) இலுப்புகடவாய் பொலிஸாருடன் முலங்காவில் பகுதியில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அப்போது 02 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த மேலும் ஒரு நபர் வீட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 25 முதல் 30 வயது வரையிலான நச்சிகுடா மற்றும் முலங்காவில் பகுதியில் குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி பொருட்கள் ஆகியவை இலுப்புகடவாய் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.