நிகழ்வு-செய்தி

ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட நான்கு சந்தேகநபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து இலுப்புகடவாய் மற்றும் முலங்காவில் பகுதிகளில் 2020 மே 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 May 2020

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இரண்டு கூட்டு நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சா கொண்ட நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 மே 15 ஆம் திகதி பெலியத்த மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சா கொண்ட மூன்று (03) நபர்களையும் உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

16 May 2020

கடற்படை உறுப்பினர்களுக்கு ஓய்வெடுக்க தாய் இலங்கை புத்த கலாச்சார மையத்தின் இருப்பிட வசதிகள் வழங்கப்பட்டது

வணக்கத்திற்குரிய ராஸ்ஸகல சீவலி தேரரால் பராமரிக்கப்படுகின்ற தாய் இலங்கை புத்த கலாச்சார மையத்தின் இருப்பிட வசதிகள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளுக்காக கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

16 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 67 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படை வீரர்களின் 16 குடும்பங்களைச் சேர்ந்த 67 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்து 2020 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வெளியேறினர்.

16 May 2020

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண பிரிவுகள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் ஏற்படுகின்ற எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை இன்று (2020 மே 16) நடவடிக்கை எடுத்துள்ளது.

16 May 2020

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடலோர காவல்படையின் ஒருங்கிணைப்புடன் கடற்படை ஒலுவில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இரண்டு நபர்கள் (02) கைது செய்ய்ப்பட்டனர்.

16 May 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை சங்கம் ஐந்து இலட்சம் ரூபாவை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படை சங்கம் ஐந்து இலட்சம் ரூபா பணம் (ரூ.500000.00) 2020 மே 15 ஆம் திகதி கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

16 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 26 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரிப்பு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 26 கடற்படை வீரர்கள் 2020 மே 15 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

16 May 2020