நிகழ்வு-செய்தி

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 18 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டன.

18 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 18 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படை வீரர்களின் 05 குடும்பங்களைச் சேர்ந்த 18 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்து 2020 மே 17 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வெளியேறினர்.

18 May 2020

யானைத் தந்தம் கொண்ட ஒருவர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து இன்று (2020 மே 18) கதிர்காமம் கோதமிகம பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது வீட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

18 May 2020

மன்னார், நச்சிகுடா கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 22 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

மன்னார் நச்சிகுடா பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவநெக தளத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 22 நபர்கள் இன்று (2020 மே 18) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

18 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 15 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 15 கடற்படை வீரர்கள் 2020 மே 17 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

18 May 2020