பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 12 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 12 நபர்கள் 2020 மே 19 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த இந்த சர்வதேச கப்பல்கள் மற்றும் துறைமுக பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2020 மே 19 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர் மேலும், தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களையும் கடற்படையால் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

தற்போது வரை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடித்த 158 நபர்கள் 21 குழுகளாக மையத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் 73 இலங்கையர்கள் இந்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.