வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 45 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படை வீரர்களின் 11 குடும்பங்களைச் சேர்ந்த 45 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்து 2020 மே 19 ஆம் திகதி குறித்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வெளியேறினர்.

அதன்படி, அனுராதபுரம் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட 07 குடும்பங்களைச் சேர்ந்த 26 நபர்களும், திருகோணமலை பகுதியில் நிறுவப்பட்ட கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் தனிமைபடுத்தப்பட்ட 04 குடும்பங்களைச் சேர்ந்த 19 நபர்களும் உட்பட கடற்படை வீரர்களின் 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 45 நபர்கள் இவ்வாரு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு கடற்படையால் வழங்கப்பட்டது.

இந்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினாலும் இன்னும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள்