‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளுக்கு உதவி வழங்க கடற்படைக் கப்பலொன்று புறப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக, வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மையமாக் கொண்டு நகர்ந்த ‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று குறித்த பகுதிக்கு அனுப்ப கடற்படை இன்று (2020 மே 21) நடவடிக்கை எடுத்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடிக்கச் சென்ற சுமார் 30 பல நாள் மீன்பிடி படகுகள் இந்தோனேசியாவை அண்டிய கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இப்போது சூறாவளியின் தாக்கம் குறைந்த காரணத்தால் மீன்பிடி படகுகள் மீண்டும் நிலத்தை திரும்பிக் கொண்டிருக்கின்றது. நிலத்தை நெருங்கும் பல நாள் மீன்பிடி கப்பல்களுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர இன்று (2020 மே 21) புறப்பட்டு சென்றுள்ளது.p>

இலங்கையின் மீன்பிடி சமூகத்தை பாதுகாக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மற்றும் பல சந்தர்ப்பங்களில், மீன்பிடி படகுகளுக்கு மற்றும் மீனவர்களுக்கு உதவ கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீன்பிடி படகுகளும் பாதுகாப்பாக தரைக்கு கொண்டுவர கடற்படை நடவடிக்கை எடுக்கும்.