சட்டவிரோத போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்த ஒரு நபர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 20 ஆம் திகதி திருகோணமலை ஜமாலியா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது சட்டவிரோத போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

நாட்டிற்குள் நடைபெறுகின்ற சட்டவிரோத செயல்கள் தடுப்பதற்கும் தீவைச் சுற்றியுள்ள பெருங்கடலை பாதுகாப்பதற்கும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து, 2020 மே 20 ஆம் திகதி திருகோணமலை ஜமாலியா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது, ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்ட 9 அட்டைகளில் அடங்கிய 90 தடைசெய்யப்பட்ட மாத்திரைகள், 1 கிராம் மற்றும் 500 மி.கி கேரள கஞ்சா மற்றும் 05 வாள்கள் (அவற்றில் 04 உள்நாட்டிலும் 01 வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டவை) கொண்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் அப்பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.