நிகழ்வு-செய்தி

‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பல பொருட்கள் கடற்படைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பொருட்கள் ‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் கீழ் ஷர்த்தா தொலைக்காட்சி மற்றும் மஹமெவுனாவ தியான மையம் இனைந்து இன்று (2020 மே 22) கடற்படையிடம் வழங்கியுள்ளது.

22 May 2020

சமுதுர கப்பல்‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளை நெருங்கியது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க 2020 மே 21 ஆம் திகதி புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல் இப்போது குறித்த மீன்பிடி படகுகளை அடைந்துவிட்டு, அவர்களுடன் தகவல்தொடர்புகளை உருவாக்கியுள்ளது.

22 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 13 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 21 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

22 May 2020

கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் தங்காலை கலால் அலுவலகம் இணைந்து 2020 மே 21 ஆம் திகதி பெலியத்த நகர பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

22 May 2020

ஐஸ் போதைப்பொருள் கொண்ட இரு சந்தேக நபர்கள் (02) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மே 21 ஆம் திகதி கற்பிட்டி, நரிகுடா பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருள் கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 May 2020

சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 21 ஆம் திகதி திருகோணமலை, உப்புவேலி மற்றும் வெலிஒய ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள இரண்டு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 May 2020

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 21 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டன.

22 May 2020