சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 21 ஆம் திகதி திருகோணமலை, உப்புவேலி மற்றும் வெலிஒய ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள இரண்டு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாட்டிற்குள் நடைபெறுகின்ற சட்டவிரோத செயல்கள் தடுப்பதற்கும் தீவைச் சுற்றியுள்ள பெருங்கடலை பாதுகாப்பதற்கும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து, 2020 மே 21 ஆம் திகதி திருகோணமலை உப்புவேலி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவலடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள்களிடமிருந்து 25 அட்டைகளில் அடங்கிய 250 சட்டவிரோத போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், புல்மூட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட மற்றொரு சோதனை நடவலடிக்கையின் போது, வெலிஒய பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் சோதனை செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 103 மி.கி ஹெராயின் மற்றும் 05 சட்டவிரோத போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி குறித்த சந்தேக நபர் ஹெராயின் மற்றும் போதை மாத்திரைகள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19-38 வயதுக்குட்பட்ட திருகோணமலை, ஆனந்தபுரி மற்றும் வெலிஒய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஹெராயின் மற்றும் போதைப்பொருள் மாத்திரைகளுடன் அவர்கள் மேலதிக விசாரணைக்காக உப்புவேலி மற்றும் வெலிஒய காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.