ஐஸ் போதைப்பொருள் கொண்ட இரு சந்தேக நபர்கள் (02) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மே 21 ஆம் திகதி கற்பிட்டி, நரிகுடா பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருள் கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், கற்பிட்டி காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் 2020 மே 21 ஆம் திகதி கற்பிட்டி நரிகுடா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) சந்தேக நபர்களை சோதனை செய்தனர் அப்போது அவர்களிடமிருந்து 01 கிராம் மற்றும் 200 மி.கி ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த நபர்கள் கைது செய்யபட்டனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து கற்பிட்டிபொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.