‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பல பொருட்கள் கடற்படைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பொருட்கள் ‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் கீழ் ஷர்த்தா தொலைக்காட்சி மற்றும் மஹமெவுனாவ தியான மையம் இனைந்து இன்று (2020 மே 22) கடற்படையிடம் வழங்கியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 மே 22) ‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் கீழ் ஷர்த்தா தொலைக்காட்சி மற்றும் மஹமெவுனாவ தியான மையம் இனைந்து 11 சலவை இயந்திரங்கள், 300 நீராவி இன்ஹேலர்கள் மற்றும் பல அத்தியாவசியப் பொருட்கள் கடற்படையிடம் வழங்கியுள்ளது. இந் நிகழ்வுக்காக அலுதேனியே சுபோதி தேரர் மற்றும் ஷர்த்தா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத் தினுவர உள்ளிட்ட ஷர்த்தா தொலைக்காட்சி மற்றும் மஹமெவுனாவ தியான மையத்தின் உறுப்பினர்கள் கழந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவு செயலாளர் கமாண்டர் சமன் விதானாச்சி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.