ஹெரொயின் கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2020 மே 22 ஆம் திகதி மன்னார் தேவம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது ஹெரொயின் போதைப்பொருள் கொண்ட ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், இலுப்புகடவாய் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் 2020 மே 22 ஆம் திகதி மன்னார் தேவம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை சோதனை செய்தனர் அப்போது அவரிடமிருந்து 06 கிராம் மற்றும் 350 மி.கி ஹெரொயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யபட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் பெலியத்த பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இலுப்புகடவாய் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.