தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கடற்படையினரால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நோர்வே தீவின் தென்மேற்கில் உள்ள கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள், 2020 மே 23 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள், திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நோர்வே தீவின் தென்மேற்கில் உள்ள கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர். அங்கு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 40 கிலோ மீன்கள், 225 மீட்டர் நீளமுள்ள தடைசெய்யப்பட்ட வலை, ஒரு டிங்கி படகு மற்றும் அவர்கள் பயன்படுத்திய வெளிப்புற எரிப்பு இயந்திரம் ஆகியவற்றை கடற்படை பறிமுதல் செய்தது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 38 வயதிற்குட்பட்ட முத்தூர் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட வலை, டிங்கி படகு, மீன்கள் மற்றும் வெளிப்புற எரிப்பு இயந்திரம் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.