கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மியன்மாரில் உள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு பல சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுமார் 350000.00 ரூபா மதிப்புள்ள சுகாதாரப் பொருட்கள் மியன்மாரில் உள்ள இலங்கையர்களால் கடற்படையிடம் வழங்கப்பட்டன.

மியன்மாரில் இருந்து இலங்கையர்கள் குழு ஒன்று கொண்டுவந்த Myanmar Airways International விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு விமானம் இந்த சுகாதாரப் பொருட்களை மியான்மரில் உள்ள இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு இலவசமாக கொண்டு வந்தது. ரூ. 350000.00 மதிப்புள்ள இந்த சுகாதார பொருட்களின் 25 சுகாதார உடைகள், 6000 அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் 1500 முகமூடிகள் உள்ளன.