தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று (01) கடற்படையினரால் கைது

கடற்கரையில் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று 2020 மே 24 ஆம் திகதி கோகிலாய், துடுவ கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, 2020 மே 24 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கடற்கரையில் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, குறித்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை, டிங்கி படகு மற்றும் படகில் இருந்த பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலை, டிங்கி படகு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக புல்மூட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.