கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து நான்கு நபர்கள் (04) வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நான்கு (04) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், இன்று (2020 மே 27) குறித்த மையத்தை விட்டு வெளியேறினர்.

இவ்வாரு வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு பின், அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறிய இவர்களுக்கு தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களை கடற்படையால் வழங்கப்பட்டன.

இந்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினாலும் இன்னும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள் மேலும், இந்த மையத்தில் 19 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.