நிகழ்வு-செய்தி

காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கடற்படையினரால் 2020 மே 27 ஆம் திகதி அகற்றப்பட்டன.

27 May 2020

கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து நான்கு நபர்கள் (04) வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நான்கு (04) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், இன்று (2020 மே 27) குறித்த மையத்தை விட்டு வெளியேறினர்.

27 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 344 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 12 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 26 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

27 May 2020