வெளிநாட்டு கப்பல் குழுவினரை மாறிக்கொள்ள கடற்படையின் உதவி

சிறப்பு விமானமொன்று மூலம் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த வெளிநாட்டினர் காலி துறை முகத்தில் நங்கூரமிட்டுள்ள அவர்களின் நாடுகளுக்குரிய கப்பல்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் குறித்த கப்பல்களில் இருந்த வெளிநாட்டினர் பாதுகாப்பாக மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து செல்லவதுக்கும் 2020 மே 28 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்தளை விமான நிலையத்திற்கு வருகைத்தந்த காலி துறைமுகத்தில் உள்ள மூன்று வெளிநாட்டு கப்பல்களுக்கு சேர்ந்த 41 உறுப்பினர்கள் அவர்களின் கப்பல்களுக்கு அனுப்புவதற்கு முன் கடற்படையின் வேதியியல் உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவினால் கிருமி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் குறித்த கப்பல்களில் இருந்த 35 வெளிநாட்டினர் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை பாதுகாப்பான நடைமுறைகளுக்கு ஏற்ப வழங்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்போது உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவ்வாறு வருகைத்தந்தவர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன் அவர்களுக்கு அளித்த ஆதரவு குறித்து கடற்படைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.