பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் நான்கு நபர்கள் (04) வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 04 நபர்கள் 2020 மே 28 ஆம் திகதி குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த இந்த நான்கு நபர்களும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் அவர்களுக்கு கடற்படையால் வழங்கப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, 196 பேர் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிவிட்டனர், மேலும் 100 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 18 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.