கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 மே 30) கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்காக அமைப்பின் துணைத் தலைவர் திருமதி மெடில்டா சில்வா உட்பட சில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடற்படைத் தளபதி குறித்த பொருட்களை ஏற்றுக்கொண்டு, ஹெலசரண இஸ்ரேல் அமைப்பின் அனைத்து நபர்களுக்கும் கடற்படை சார்பில் தனது நன்றியைத் தெரிவித்தார்.