பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் இன்று (2020 ஜூன் 01) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த இந்த அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று (2020 ஜூன் 01) வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களையும் கடற்படையால் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

தற்போது வரை, தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முடித்த 218 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் 99 நபர்கள் இந்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.