உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 01 ஆம் திகதி அம்பாறை, ஹுலன்னுகே பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய பணிக்கு நேரடி பங்களிப்புடன் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன் படி கடற்படையினர் சாச்திரவேலி பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 ஜூன் 01 ஆம் திகதி அம்பாறை, ஹுலன்னுகே பகுதியில் ஒரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் நான்கு (04) கிலோகிராம் உள்ளூர் கஞ்சா கைது செய்யப்பட்டதுடன் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யபட்ட சந்தேக நபர் 30 வயதான ஹுலன்னுகே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், சந்தேகநபர் மற்றும் உள்ளூர் கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.