ஐஸ் போதைப்பொருள் கொண்ட சந்தேக நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 05 ஆம் திகதி காத்தான்குடி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய பணிக்கு நேரடி பங்களிப்புடன் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் வவுனதீவு பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 ஜூன் 05 ஆம் திகதி காத்தான்குடி பகுதியில் ஒரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரிடமிருந்து 950 மிலி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட 34 வயதான சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் சநடதேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.