சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவர் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2020 ஜூன் 8, அன்று நீர்கொழும்பு, போருதொட பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, கடற்படையினர் நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்கொழும்பு, போருதொட பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டில் விற்கத் தயாரான 450 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கொச்சிக்கடை, போருதொட பகுதியில் வசிக்கும் 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.