மேலும் 16 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 16 நபர்கள் 2020 ஜூன் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதன்படி, ஜூன் 08 ஆம் திகதி 09 நபர்களும், இன்று (2020 ஜூன் 09) 07 நபர்களும், தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்து பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வீடு திரும்பினர். இந்த நபர்கள் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் கடற்படையால் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கப்பட்டன.

தற்போது வரை, தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முடித்த 280 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் 56 நபர்கள் இந்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.