நிகழ்வு-செய்தி

டைனமைட் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் நபரொருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் ஒருங்கிணைந்து, 2020 ஜூன் 08 ஆம் திகதி, யாழ்ப்பாணம் காகத்தீவ் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டைனமைட்டைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களைக் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

09 Jun 2020

அழகிய கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தீவின் அழகிய கடற்கரைகளை பாதுகாக்கும் நோக்கில், காலி முகத்திடம் கடற்கரை மையமாகக் கொண்டு இன்று (2020 ஜூன் 09) மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை கடற்படை மேற்கொண்டுள்ளது.

09 Jun 2020

விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 06 இந்தியர்கள் கடற்படையால் கைது

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் மற்றும் விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்த 6 இந்திய நாட்டினரை யாழ்ப்பாணம் குரிகாட்டுவான் இறங்குதுறையில் இலங்கை கடற்படை 2020 ஜூன் 8 ஆம் திகதி கைது செய்தது.

09 Jun 2020

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட நபரொருவர் கடற்படையால் கைது

புல்மூட்டை, ஜின்னபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட நபரொருவர் 2020 ஜூன் 08 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

09 Jun 2020

மேலும் 16 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 16 நபர்கள் 2020 ஜூன் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

09 Jun 2020

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவர் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2020 ஜூன் 8, அன்று நீர்கொழும்பு, போருதொட பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

09 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 41 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 563 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 41 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 08 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

09 Jun 2020