சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, கும்புருபிட்டி மற்றும் எரக்கண்டி கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் 2020 ஜுன் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஜுன் 08 ஆம் திகதி திருகோணமலை, கும்புருபிட்டி கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 2020 ஜுன் 09 ஆம் திகதி திருகோணமலை, எரக்கண்டி கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, 15 நபர்கள் 02 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், 02 டிங்கி படகுகள் மற்றும் பல மீன்பிடி பொருட்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன. 18 முதல் 44 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிலாவேலி மற்றும் எரக்கண்டி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட பொருட்கள் நிலாவேலி மீன்வள ஆய்வாளரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டன.