சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, சிட்டிக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் 2020 மே 30 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, சிட்டிக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் உட்பட ஒரு பாரம்பரிய படகு (வல்லம்), ஒரு வெளிப்புற மோட்டார், ஒரு தடைசெய்யப்பட்ட வலை மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 35 கிலோ கிராம் மீன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தெகநபர்கள் 25 முதல் 51 வயதுக்குட்பட்ட ஊர்காவற்துறை, அல்லப்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தெகநபர்கள், பாரம்பரிய படகு (வல்லம்),சுமார் 35 கிலோ மீன் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.