கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜூன் 19 அன்று வலைத்தோட்டம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படைக்கு மீட்டெடுக்க முடிந்தது.

கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதைக் கருத்தில் கொண்டு இலங்கை கடற்படை பல ரோந்துகளை நடத்தி வருகிறது. அதன்படி, வலைத்தோட்டம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ரோந்து நடவடிக்கையின் போது கிழக்குக் கடற்படை கட்டளை, இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கண்டுபிடித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பின்னர் திருகோணமலையில் உள்ள மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.