மட்டக்களப்பு தடாகத்தில் பதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

2020 ஜூன் 21 அன்று மட்டக்களப்பு தடாகத்தில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையிப் போது, கோட்டுவாமட பகுதியில் 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை கைப்பற்றியது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய கடற்படை தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், மட்டக்களப்பில் நடத்திய ரோந்து சென்றபோது, இந்த 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வலைகள் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்பு உதவி மீன்வளத்துறை இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.