கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த மற்றுமொரு கடற்படை வீரர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 786 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு கடற்படை வீரர் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 22 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

அதன் படி குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது, இவரின் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் இவரின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்ததுடன் இவர் 2020 ஜூன் 22 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினார்.

அதன்படி, இந்த நபர் உட்பட 786 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.