சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவரைக் கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை வனாதவில்லுவ, ஸ்மைல்புரம் பகுதியில் 2020 ஜூன் 30 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் வனாதவில்லுவ காவல்துறை ஒருங்கிணைந்து 2020 ஜூன் 30 ஆம் திகதி வனாதவில்லுவ ஸ்மைல்புரம் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டுள்ளதுடன் அங்கு சோதனை செய்த விட்டொன்றில் இருந்து ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு துப்பாக்கி 03 ரவைகள் (12 துளை) மற்றும் 400 கிராம் ஈய பந்துகளை மீட்டனர்.

சந்தேக நபர் அப்பகுதியில் வசிக்கும் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.