போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு கடற்படையினர் விழிப்புணர்வு படுத்தும் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதை மேலும் நோக்கமாகக் கொண்ட "போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்" என்பதற்கு ஏற்ப தொடர் திட்டங்களை கடற்படை செயல்படுத்தியுள்ளது.

"போதைப்பொருள் இல்லாத ஒரு நாடு" என்ற தேசிய கருப்பொருளைக் கருத்தில் கொண்டு, போதைப் பழக்கத்தைத் தடுக்க வடக்கு கடற்படை கட்டளையின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் அனைத்து கடற்படை தளங்களிலும் கடற்படை விழிப்புணர்வு திட்டங்கள் தொடங்கப்பட்டன. கடற்படை பணியாளர்களின் துணைத் தளபதி மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையில், கடற்படையின் தலைமை மருத்துவ அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறித்த நிகழ்ச்சிகள் மூலம் போதைப்பொருள் மனித உடல், குடும்பம் மற்றும் சமுதாயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதும் போதைப் பழக்கத்தின் காரணங்கள் மற்றும் போதைப்பொருளிலிருந்து தனிநபர்களை விடுவித்தல் தொடர்பாக கடற்படை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், குறித்த விழிப்புணர்வு திட்டங்கள் சுகாதார வழிகாட்டி கோடுகள் மற்றும் COVID-19 தொற்றுநோயைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இணங்க நடத்தப்பட்டன.