யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினரால் மீட்பு

கடற்படையினரால் யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் 2020 ஜூலை 04 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் பல கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின்படி, யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 120 மிமீ மோட்டார் ரவையொன்று 81 மிமீ மோட்டார் ரவையொன்று (01), 60 மிமீ மோட்டார் ரவையொன்று (01) மற்றும் மூன்று ஆர்பிஜி குண்டுகள் மற்றும் ஐந்து கைக்குண்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு உடல் பொறியும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த வெடிபொருட்கள் மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றதுடன் குறித்த வெடிபொருட்களைப் பற்றி முல்லைதீவு காவல்துறை சிறப்பு பணிக்குழுவிடம் அறிவிக்கப்பட்டது. வெடிபொருட்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வெடிபொருட்கள் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.