சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கடற்படையினரால் கைது

காகதீவுக்கு தெற்கு பகுதி கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 நபர்கள் 2020 ஜூலை 05 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி காகதீவுக்கு தெற்கு பகுதி கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது சந்தேகத்திற்கிடமான ஒரு படகு சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அங்கு 24 மீன்பிடி வலைகள், பிடிக்கப்பட்ட 70 கிலோ கிராம் மீன், ஒரு படகு, ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் ஆகியவற்றை கடற்படை பறிமுதல் செய்தது.

இவ்வாரு கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மனிப்பாய் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்கள் மெலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.