சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் கடற்படையினரால் கைது

முல்லைதீவு, கோகிலாய் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள், 2020 ஜுலை 08 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள், முல்லைதீவு, கோகிலாய் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர். அங்கு தடைசெய்யப்பட்ட ஒரு வலை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பல உபகரனங்கள் ஆகியவற்றை கடற்படை பறிமுதல் செய்தது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோனமலை, கொடுவகட்டு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட வலை, மற்றும் பிற மீன்பிடி உபகரனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதீவு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.