செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 06 நபர்கள் கடற்படையினரால் கைது

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தலைமன்னார், பழைய இறங்குதுறை கடல்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 நபர்கள் 2020 ஜூலை 09 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் பகுதியில் கடல் மற்றும் மீன் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து பாதுகாப்பு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 09 ஆம் திகதி தலைமன்னார் பழைய இறங்குதுறை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சில படகுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 நபர்கள் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒரு மீன்பிடிப் படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 21 முதல் 43 வயதுக்கு உட்பட்ட மன்னார், தாவுல்பாடு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், குறித்த நபர்கள், டிங்கி படகு, சுழியோடி உபகரனங்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.