கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்

இன்று (ஜூலை 14, 2020) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை அட்மிரல் பதவிக்கு உயர்த்தினார்.

2019 ஜனவரி 01 ஆம் திகதி வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பின்னர், இலங்கை கடற்படையின் 23 வது தளபதியாக பொறுப்பேற்றார், மேலும் அவர் 2020 ஜூலை 14 ஆம் திகதி ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களால் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

குறிப்பாக இலங்கை கடற்படைக்கும் பொதுவாக தாய்நாட்டிற்கும் ஒரு உன்னத சேவையை வழங்கிய பின்னர், அட்மிரல் பியால் டி சில்வா தனது இரண்டாவது இல்லமான இலங்கை கடற்படைக்கு விடைபெற்று தனது 36 ஆண்டுகால புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கையை நாளை (ஜூலை 15, 2020) கைவிடுவார்.