கடற்ப்படை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்ன, இன்று (ஜூலை 16, 2020) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை சந்தித்தார்.

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்னாவுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். கடற்படைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இடையிலான முதல் உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.