தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 06 நபர்கள் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 06 நபர்கள் 2020 ஜூலை 20 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் கடற்படையால் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, 89 நபர்கள் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிவிட்டனர், மேலும் 18 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.