கடற்படையின் புதிய தளபதி அஸ்கிரி அத்தியாயத்தின் பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன, 24 வது கடற்படைத் தளபதியாக பதவியேற்ற பின்னர் 2020 ஜூலை 22 அன்று கண்டி அஸ்கிரி மகா விஹாரயவுக்குச் சென்று பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை தளபதியின் அன்பு மனைவியான கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேத்தேன்னவும் கலந்து கொண்டார்.

அங்கு அஸ்கிரிய மகா விஹாரய அத்தியாயத்தின் மகாநாயக்க, மிகவும் வணக்கத்திற்குரிய ராஜகீய பண்டித வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பன்னானந்த தேரர் நாட்டின் பாதுகாப்புக்காக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படைக்கு ஆசீர்வாதித்தார். போதைப்பொருள் கடத்தலை தொடர்ந்து இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டிய மகாநாயக்க தேரர், போதைப்பொருள் துன்பத்திலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க அரசாங்கத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த கடற்படைக்கு ஆசீர்வாதம் அளித்தார்.

இதனையடுத்து, கடற்படைத் தளபதி அஸ்கிரி அத்தியாயத்தின் அனுனாயக்கை மிகவும் வணக்கத்திற்குரிய வெந்தருவே உபாலி தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் பேசிய தேரர் வரலாற்று சிறப்புமிக்க அஸ்கிரிய கெடிகே விஹாரயவின் பழங்கால கட்டிடங்களை புதுப்பிக்க கடற்படையின் உதவி வழங்குதல் தொடர்பாக மற்றும் தொடந்தும் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் கடற்படையினரின் பங்களிப்பில் நிறைவேற்ற கடற்படை தளபதி நடவடிக்கை எடுத்த்தை குறித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.