நிகழ்வு-செய்தி
கேப்டன் புத்திக ரூபசிங்க இலங்கை கடற்படைக் கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்
![](../assets/images/news/event_news/front_img/202008061945.jpg)
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலான சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக (2020 ஆகஸ்ட் 06) அன்று கேப்டன் புத்திக ரூபசிங்க கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
06 Aug 2020
4 வது துரித தாக்குதல் படைப்பிரிவுக்கு ஒரு மிதக்கும் பேரழிவு மேலாண்மை பயிற்சி பிரிவு
![](../assets/images/news/event_news/front_img/202008061815.jpg)
செயல்பாட்டு சேவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் பி 419 துரித தாக்குதல் ரோந்து படகு திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் மிதக்கும் பேரழிவு மேலாண்மை பிரிவாக மாற்றிய பின்னர் கிழக்கு கடற்படை கட்டளையின் கட்டளை அதிகாரி 2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் பயிற்சி பிரிவுக்கு சடங்கு முறையில் ஒப்படைத்தார்.
06 Aug 2020
கின் நதி பகுதியில் வெள்ள அச்சுறுத்தலைத் தவிர்க்க கடற்படையின் பங்களிப்பு
![](../assets/images/news/event_news/front_img/202008061200.jpg)
கடந்த தினங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணத்தினால், காலி வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கடற்படையினரால் அகற்றப்பட்டன. குறித்த நடவடிக்கை மூலம் இப்பகுதியில் தாழ்வான பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
06 Aug 2020