நிகழ்வு-செய்தி

புதிய பல்நோக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சேவை வளாகம் திறக்கப்பட்டது

திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் புதிதாக கட்டப்பட்ட புதிய பல்நோக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சேவை வளாகம் (AOPV Stores and Workshop Complex) இன்று (2020 டிசம்பர் 12) திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

12 Dec 2020

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பாடநெறி முடித்த 23 கடற்படை அதிகாரிகள் சான்றிதழ்களைப் பெற்றனர்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பதினான்காம் (14 வது) பாடநெறியில் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 2020 டிசம்பர் 11 ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

12 Dec 2020