130 மூத்த கடற்படை வீரர்களுக்கு மற்றும் 20 இளைய கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையில் பணி யாற்றும் 130 மூத்த கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மற்றும் 20 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2021 பிப்ரவரி 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடற்படையின் நீண்ட காலமாக சேவைசெய்த மூத்த வீரர்களின் சேவை மதிப்பீடு செய்ய குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்படுகின்றன. இது வரை 3524 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், 2020 செப்டம்பர் மாதம் முதல் இந்த வட்டி இல்லாத கடன் இளைய கடற்படை வீரர்களுக்கும் வழங்கப்படுகின்றதுடன் இது வரை 110 இளைய கடற்படை வீர்ர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. மேலும், வரும் காலகட்டத்தில், 1998 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு மற்றும் 19 இளைய கடற்படை வீரர்களுக்கு குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடத்தக்கது.