நிகழ்வு-செய்தி

யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களுக்காக “மிஹிந்து செத் மெதுரவில்” நடத்தப்பட்ட சிறப்பு இரவு விருந்து நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களின் நலனுக்காக இலங்கை இராணுவத்தால் பராமரிக்கப்படுகின்ற மிஹிந்து செத் மெதுர நிலையத்தில் தங்கி இருக்கும் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு நடத்திய சிறப்பு இரவு விருந்து 2021 பிப்ரவரி 20 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கழந்து கொண்டனர்.

21 Feb 2021