நிகழ்வு-செய்தி

நாட்டின் குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகள் இலங்கை கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலையாக உருவாக்கும் கடற்படை சமூக சேவை திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த சமூக சேவை திட்டத்திற்கான நிதி பங்களிப்பு அனைத்து கடற்படை அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்தை தானாக முன்வந்து வழங்குகிறார்கள், மேலும் இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனிதவளத்தையும் கடற்படை வழங்குகிறது.

20 Apr 2021