நிகழ்வு-செய்தி

தேசிய போர்வீரர்களின் நினைவு விழா அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது

2021 ஆம் ஆண்டு தேசிய போர்வீரர்களின் நினைவு விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (2021 மே 19) பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

19 May 2021

கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில் இடம்பெற்றது

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக யுத்ததின் போது உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலமையில் இடம்பெற்றன.

19 May 2021

ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன இன்று (2021 மே 19) ஓய்வு பெற்றார்.

19 May 2021

கெலனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மிதக்கும் கழிவுத் தடையை மீண்டும் நிறுவ கடற்படையின் உதவி

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கெலனி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து சேதமடைந்த அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக நீர் பெறும் இடத்திற்கு (water intake well) கழிவுகள் நுழைவதைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கழிவுத் தடையை (Floating Boom) மீண்டும் நிறுவ இலங்கை கடற்படை 2021 மே 18 ஆம் திகதி உதவி வழங்கியது.

19 May 2021